உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!
குடை இல்லாத நேரத்து
மழையாய் நீயே வர வேண்டும்
என்று வேண்டுகிறேன்!
மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க் வேண்டுகிறேன்!
கடலில் கால் நானைத்தபடி
உன்னோடு விளையாட
அலையடிக்க் வேண்டுகிறேன்!
கவிதை சொல்லியபடி உன்னோடு
காலார நடக்க பாதை
நீள வேண்டுகிறேன்!
காதலித்தபடிஉன்னையே
கணவனாக கைபிடிக்க
வேண்டுகிறேன்...
